விண்மீனே ....,
மேகங்களின் சாரல் நீ
என் நெஞ்சில் விழும் மழைத்தூரல் நீ
காற்றில் பரவும் வாசம் நீ
என் மார்பைத் துளைக்கும் சுவாசம் நீ
விண்மீனே...
பறவைகளின் பாஷை நீ
பரந்து விரியும் திசையும் நீ
வெண்ணிலவின் வெளிச்சம் நீ
அதில் காணக்கிடைக்கும் வெட்கம் நீ
விண்மீனே...
கைகள் கோர்க்கும் தருணம் நீ
கட்டி அணைக்கும் நொடியில் நீ
அன்பு நீ, ஆசை நீ
இன்பம் நீ, (எனக்) ஈடும் நீ
உண்மை நீ, ஊடல் நீ
எண்ணம் நீ, ஏக்கம் நீ
ஐயும் நீ, ஐயமும் நீ
ஒளியும் நீ, ஓசையும் நீ,
ஒளனம் நீ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக