Start camera, Rolling sir..... Action.
பொதுவாக பெற்றோருக்கு மகள் பிறந்தால் அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக அமையும் என்பார்கள். ஆம், அருவியும் அப்பாவின் செல்லப்பிள்ளையே. சுட்டித்தனமான பேச்சு, தைரியமான குணங்களைக் கொண்டு இந்த அக்கறையற்ற சமூகத்தில் வாழும் பெண் தான் அருவி.
முதலில் இந்த படத்திற்கு விமர்சனம் தேவையில்லை.. தேவையானது தரிசனமே!
கிடைத்துவிட்டது.. பார்த்துவிட்டேன். (மீண்டும் பார்ப்பேன்).
கிடைத்துவிட்டது.. பார்த்துவிட்டேன். (மீண்டும் பார்ப்பேன்).
இந்த லௌகரிய வாழ்க்கையில் வாழ தேவையானது மனிதநேயமல்ல, பணமே என்ற இன்றய நிலையை எடுத்துறைப்பதே அருவி.
அருவியானது எவ்வாறு ஒரு இடத்தில் தோன்றி வளைந்து,ஓடி பல இன்னைல்களுக்கு உள்ளாகி கடைசியில் அணை போட்டு தடுத்தாலும் வந்து பிரமாண்டமாய் காட்சியளிக்கிறதோ.. அது போலவே இந்த அருவி கதாபாத்திரம் பல இன்னல்களை கடந்து வந்தே இருக்கிறது.
அதே நேரத்தில் அந்த அருவி சில நேரங்களில் பயமான தோற்றத்தையும் அளிக்க வாய்ப்புண்டு.அவ்வாறு அழகாக ஓடிக்கொண்டிருந்த பெண்ணின் வாழ்க்கையில் தீடீரென அசம்பாவிதம் நடந்த ஒரு இடத்தில் தான் கதை ஆரம்பிக்கிறது.
இந்த கதையை வெளிக்கொணரும் நோக்கம் எனக்கில்லை. என்றாலும், இந்த விமர்சனத்தில் படங்களில் உள்ள சில உணர்ச்சிகளை சொல்ல மேலோட்டமாக சொல்ல முயற்சிக்கிறேன்.
கதை ஆரம்பிக்கும் போது அருவி கதாப்பாத்திரத்தை குழந்தை காலம் முதல் கல்லூரி காலம் வரை 20 நிமிடங்கள் காண்பித்துள்ளார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். பொதுவாக ஒரு பெண் இவ்வளவு தைரியமாக உள்ளார் என்பது தீடீரென வராது. பிறந்ததில் இருந்து இந்த குணாதிசயங்கள் படிப்படியாக வளர்பவையே. எனவே, இந்த கால அவகாசம் தேவையே.
ஒவ்வொருவரையும் காவல் அதிகாரி விசாரிக்கும் போது அருவியின் ஒவ்வொரு பக்கம் தெரிகிறது. பொதுவாக வாழ்க்கையில் சுமார் 25 வயது வரை பெற்றோரை சார்ந்தே வாழவேண்டி உள்ளது. இது இயல்பான நிலையே. ஆனால் அருவி கல்லூரி காலத்தில் ஒரு சம்பவத்தால் வீட்டை விட்டு வெளியேற்ற படுகிறாள்.
ஒரு பெண், அதுவும் படித்தப் பெண் சமூகத்தில் வாழ பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வருகிறாள். அவ்வாறு கடந்து வரும் பெண்மணி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறாள்.இது பல படங்களில் பார்த்துள்ளேன். ஆனால் அருவி, இது விசித்திரமான கதைதான்.
இந்த படத்தில் சமூகத்தில் நடக்கும் பல சம்பவங்களை அப்பட்டமாகவே காட்டியுள்ளனர்.உதாரணமாக, திருநங்கைகளின் வாழ்க்கை, தொலைக்காட்சி நிறுவனங்களில் நடக்கும் வியாபாரம், தீண்டாமை போன்ற பல விசயங்கள் வெளிவருகிறது.
இந்த படத்தில் வேலை செய்த தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கி உள்ளார்கள் என்றே சொல்லலாம். படத்தின் முன்னணி, இசையே.. விவாதங்கள் நடக்கும் இடங்களில் கூட அழகாக பின்னணி இசையின் மூலம் கதைக்குள் கொண்டு போக செய்கிறார் இசையமைப்பாளரான பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பவராஜ். ஒளிப்பதிவாளர் Shelley Calist பல கருத்துக்களை காட்சிகளை அமைப்புகள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். இருந்தாலும், கேமரா கிளார்டி கொஞ்சம் சுமாராக தான் இருந்தது. படத்தொகுப்பாளர் Raymond Derrick Crasta புதிய விதமான பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.நன்றாகவே வந்துள்ளது.
அடுத்ததாக படத்தின் மையமான அதிதி பாலன் (அருவி), இவர் தனது கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா? வாழ்ந்தாரா? இல்லை ஒருவேளை இப்படி ஒரு பெண் இருந்தால் இப்படித்தான் இருக்குமா? என்ற பல சிந்தனைகளை எழ வைத்திருக்கிறார் அதிதி பாலன். கதைக்கு என்ன தேவையோ அதை எதார்த்தமாக நடித்துள்ளார். முதல் படம் என்பதற்கு ஒரு சான்றும் இல்லை. இந்த படத்திற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார் என்பது படத்தை பார்த்தாலே தெரிகிறது. வாழ்த்துக்கள்...
கடைசியாக கப்பற்படை தலைவனான இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். இவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் துணை இயக்குநர் என்று தெரியவந்தது. ஆனால் அவர் உபயோகிக்கும் பக்கா கமர்ஷியல் கூறுகள் மிகவும் கம்மியாகவே உள்ளது. இன்று ஜனநாயகம் என்று சொல்லி கொள்ளக்கூடும் சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை நன்றாக கூர்ந்து கவனித்து இந்த கதையை எழுதியிருக்கிறார். கருத்துக்கு நன்றிகள்..
AIDS (HIV) என்ற நோய் வெறும் நோய் மட்டுமே தீண்டாமை அன்று... உறவுகளை நேசியுங்கள். உறவாட யோசியுங்கள். மனது அருவியாகும்.
வாழ்க்கை மகிழ்வாகும்.
வாழ்க்கை மகிழ்வாகும்.
- - - - - - × - - - - - × - - - - × - - - - - -
Super valthukkal bharathi
பதிலளிநீக்குநன்றி 🙏
நீக்குGreat work da... bharathi
பதிலளிநீக்கு🙏 thanks machan
நீக்குSuch an amazing review congrats bro
பதிலளிநீக்குThanks da ❤️
நீக்கு