தன்னிடம் திறமை இருந்தும் அதை நிரூபிக்க தக்க சூழல்களை எதிர்பார்த்து கொண்டு இருப்பர் பலர். திறமையே இல்லாமல், கொடுத்த அதிகாரத்தை தப்பான சூழலில் பயன்படுத்திக் கொண்டிருப்பர் சிலர்.
இவ்விரண்டின் வேறுபாட்டையும், அதில் நிறைந்திருக்கும் இன்ப துன்பங்களை வெளிக்கொணரும் முயற்சியாக, கமர்ஷியல் காமெடி பொழுதுபோக்காக அமைந்த படமே 'தானா சேர்ந்த கூட்டம்'.
ஸ்பெஷல் 26 படத்தின் பாணியில் அமைந்த படமாயினும், காமெடியுடன் கலந்து ஒரு கருத்தை எடுத்து வைக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
திறமை இருந்தும் வேலை கிடைக்காமல் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், நாம் என்ன தவரிழைத்தோம்? ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது? வறுமையில் பிறந்தது நம் தவறா? இல்லை வறுமை தெரியாமலிருக்கும் முதலாளி தவறானவனா? என்ற பல்வேறு சிந்தனைகள் அவரவர் மனதில் எழுவது இயற்பாய் இருப்பினும் அது மறுக்க முடியாத உண்மையே..
இது இந்த காலத்தில் மட்டுமல்ல பல தலைமுறைகளை கடந்து நடந்து கொண்டு வருவது இன்றியமையாதது. பல கஷ்டமான சமயங்களில் சில அப்பாவியான இளைஞர்கள் இதில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்த நிகழ்வும் பலவுண்டு.
ஆசைக்காரர்களிடமும் அரசியல்கார்களிடமும் போய்விட்ட கருப்பு பணம் திரும்பி வருவதென்பது பிரிந்த உயிரை இறந்த உடலில் சேர்க்கும் முயற்சியாகும். இந்த அதிரங்கமான செயலை செய்ய ஒருவனால் முடியாது..
ஆம், ஒருவனால் மட்டும் ஒன்றும் புடுங்க முடியாது. நிறைய பேர் சேர்ந்தால் தான் புடுங்க முடியும். அப்படி இந்த படத்தில் நடக்கும் சில சம்பவங்களின் மூலம் நிகழும் ஊழலை ஒழிக்க, தானா சேர்ந்த கூட்டத்தின் கதையிது.
முன்பு சொல்லியது போல திறமை இருந்தும் வேலைகிடைக்காத வாலிபன் சூர்யா. அதே போல இந்த நிலைமையில் வாழ முடியாமற் தற்கொலை செய்து கொள்ளும் சூர்யாவின் நண்பன் கலையரசன்.
இது தற்கொலையல்ல இந்த முடிவுக்கு தள்ளப்பட்ட கொலை என்ற உணர்வோடு, அரசியல்வாதிகள் தப்பான விஷயங்களுக்கு கேடுகெட்ட முறையில் நடத்தும் ஊழலை, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் சரியான
விஷயங்களுக்கு சூர்யாவின் தலைமையில் நடத்துகிறது.
விஷயங்களுக்கு சூர்யாவின் தலைமையில் நடத்துகிறது.
படத்தில் நிறைய சின்னச்சின்ன கருத்துக்களை ஆங்காங்கே எடுத்துவைக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். வெறும் கருத்துக்களை எடுத்துவைத்தால், அதிகமான மக்கள் பாக்காமற் போக வாய்ப்புள்ளதால் அழகாக, நகைச்சுவையுடன் கலந்து எடுத்து வைக்கிறார்
.
ஒரு சாதாரண வீட்டில் வாழும் இளைஞனாக சூர்யா நடித்துள்ளார். 1980 -ல் நடக்கும் கதைபாணியில் இருப்பதால் பழைய சூர்யாவை பார்ப்பது போல தோன்றியது. 'மௌனம் பேசியதே' படத்தில் வரும் சூர்யா அங்கங்கே வந்து போவது தெரிகிறது. பார்க்கவே சுவாரசியமான இருந்தது. கதைக்கு தேவையான அளவில், பல அம்சங்களைக் கொண்டு படத்தில் நடிப்பை காட்டியிருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன்,செந்தில், கல்கி சிவசங்கர் ஆகிய மூவரும் இந்த கூட்டதின் மூத்த உறுப்பினராய் திகழ்கின்றனர். ரம்யா கிருஷ்ணனின் அசட்டுத்தனமும், செந்திலின் காமெடியும், சிவசங்கர் தான் நிகாரிக்கப்பட்ட காரணத்தை கூறும்கணம் ஒரு பொழுது மேலும் இதைப்பற்றி சிந்திக்க வைக்கிறது.
தம்பி ராமையா, தனது வாழ்க்கையை அலுவலக உதவியாளராகவே கழித்து, பதவியில் இருக்கும் போதே நீ செத்தால் தான் உன் பதவி உன் மகனுக்கு கிடைக்கும் என்று அவர் அதிகாரியே சொல்லி அழுத்தப்படும் நிலைமையின் குணத்தை அழகாக காட்டியுள்ளார்.
ஆர்.ஜெ.பாலாஜி தனது குணச்சித்திர பாத்திரத்தை நன்றாக கையாண்டுள்ளார் என்றே சொல்லலாம். அவர் சில இடங்களில், சமூகத்தில் நடக்கும் விஷியங்களை அப்பட்டமாக கூறி கைதட்டல்கள் வாங்கிவிடுகிறார். வெளிநாடுகளில் இருந்து குளிர்பாகன (கூல் ட்ரிங்க்ஸ்) நிறுவனங்கள் வந்து நம் ஊர் பாகனங்களை இன்னும் சில நாட்களில் அழித்து விடும் என்று கூறும் கருத்துக்களை நாம் இன்று கண்ணார காண்கிறோம்.
நவரச நாயகன் கார்த்திக் தனது நவரசங்களையும் நிறுத்தி நிதானமாக கையாண்டுள்ளார். பொறுமையாகவும் விவேகமாகவும் இருக்கும் பாத்திரத்தில் தனது நிசப்தம் கலந்த நடிப்பை காட்டியுள்ளார்.
ஊழலை தெரியப்படுத்தும் விக்னேஷ் சிவன் தற்காலிக அரசியலில் நடக்கும் ஊழலையும் விட்டுவைக்கவில்லை. சசிகலாவை (சின்னம்மா) எதிர்மறையாக தாக்கியுள்ளார்.
'நானும் ரௌடி தான்' படத்திலும் சரி, 'போடா போடி' படத்திலும் சரி, இரண்டிலும் கதா நாயகிகளுக்கு ஒரு அழுத்தமான கதப்பாத்திரம் அமைந்திருப்பதை காணலாம்.
அந்த படங்களில், பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்திருந்தார்.ஆனால், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் வெறும் காதல் கதாபத்திரமாகவே வருகிறார் என்பது ஒரு சிறிய குறையாக உள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் படத்திற்கு ஒரு பக்கபலமாக அமைத்துள்ளார். சில இடங்களில் வரும் பின்னணி இசை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. பாடல்கள் அனைத்தும் அழகாக அமைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் 1980-களில் நடக்கும் காட்சிகளை வின்டேஜ் வடிவத்தில் காட்டியிருக்கிறார். இது கதைக்குள் செல்ல உதவுகிறது. மேலும், படம் முழுவதும் கலர்புல்லாக இருப்பதை உணரமுடிகிறது.
படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத், நாம் எழுதும் எழுத்துக்களை கோர்வையாக மாற்றி கவிதையக்குவதை போல, காட்சிகளை ஒருங்கிணைத்து படமாகியுள்ளார்.
மொத்தத்தில், 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் எப்படி கட்டிட பொறியாளர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்ததோ, அதேபோல் 'தானா சேர்ந்த கூட்டம்' அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக