Thirai Kavingan

Thirai Kavingan
Do you like Cinema? then click on the image & like the page...

சனி, 16 டிசம்பர், 2017

சத்யா திரைவிமர்சனம்

பொதுவாக திரில்லர் சஸ்பென்ஸ் என்ற வரிசையில் துருவங்கள் பதினாறு போன்ற சில படங்கள் தற்போது பிரபலமாகி வருகிறது.இந்த களத்தில் பல படங்கள் வந்தபோதிலும் அதில் சில படங்களே வெற்றியடைகிறது. அந்த வரிசையில் சத்யா தன் முத்திரையை பதித்துள்ளது என்றே கூறலாம்.

    ‎
இந்த திரைப்படம் தெலுங்கில் கடந்த வருடம் Kshanam என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் ரீமேக் படமாகும். ரீமேக் படம்தானே சுலபமாக எடுத்து விடலாம் என்று சிலர் எண்ணுவீர்கள்.ரீமேக் படம் என்றால் சுலபமல்ல அதில் நிறைய சிக்கல்கள் ஒழிந்துள்ளன. அதை நேர்த்தியாக எடுத்த இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகள்.



படம் தொடங்கிய 5 நிமிடத்திலேயே கதைக்குள் சென்று விடுவது மற்ற படங்களில் தரும் சலிப்பை தவிர்த்தது.விறுவிறுப்பான கதையில் அவ்வப்போது முன்கதையில் வரும் காதல் பகுதி சற்று குறைத்து இருக்கலாம் என்றே தோன்றியது.


கதைக்கு பக்கபலமே ரியா கௌதம் என்ற பெண்ணை கடத்தியது யார்? எதற்காக? என்ற கேள்வி கடைசி வரும் தெரியாதிருக்கும் சஸ்பென்ஸ் தான்.
அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை அழகாக உள்வாங்கி வெளிக்காட்டி உள்ளார்கள். சிபி சத்யராஜ் அவரது காதலியின் தவிப்பை உணர்வது மற்றும் கடைசி காட்சியில் தன் உணர்வை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ரம்யா தன்னை உலகம் பைத்தியம் என்று எண்ணுவது தவிர தான் காதலனும் நம்புகிறான் என்ற தவிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
வரலக்ஷ்மி சரத்குமார் தனது கதாபாத்திரத்தில் நடித்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்தார் என்றே சொல்ல தோன்றுகிறது. சதீஷ் நகைச்சுவை கதாப்பாத்திரத்தை தாண்டி ஒரு ஆதரவான கதாபாத்திரத்தில் அமைப்பாக நடித்துள்ளார்.ஆனந்தராஜ் எப்போதும் போல சில இடத்தில் நகைச்சுவை கலந்த பயத்தை ஏற்படுத்துகிறார்.
தொழில்நுட்பம் என்று பார்க்கும் போது முதல் பாராட்டை வாங்க தகுதியடைவர் இசையமைப்பாளர் சீமான் கே கிங் . இவர் அமைத்த இசை சில இடங்களில் நம்மை படத்தின் உள்ளே சென்றடைய வைக்கிறது. ஒலிப்பதிவு,
சில இடங்களில் மிக துல்லியமாக அமைத்திருப்பதை உணரமுடிகிறது. ஒளிப்பதிவு கதைக்கு தேவை என்னவோ அதை திரையில் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. படத்தொகுப்பு நன்றாகவே இருந்தது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் படத்தை சுருக்கிருந்தால் இன்னும் மிருதுவாக இருந்திருக்கும்.
முடிவில் அந்த குழந்தையின் தன்மையை வெளிப்படுத்தும் விதம் அருமை.மொத்தத்தில், தன் காதலியை 7 வருடம் கழித்து தேடி வரும் நாயகன், அவளது குழந்தை கடத்தப்பட்டத்தை உணர்ந்து அவளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியே சத்யா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Review

விண்மீனே..