முற்பொழுதில் பார்த்தபோது தெரியவில்லை,
பிற்பொழுதில்நீ எம்காதலி ஆவாயென்று - ஆகையால்
காதலிக்காதே காதலி.
பிற்பொழுதில்நீ எம்காதலி ஆவாயென்று - ஆகையால்
காதலிக்காதே காதலி.
சிறுபொழுது விளையாட்டில் ஆரம்பித்த நட்பு,
மறுபொழுதில் வேடிக்கை வினை ஆகிவிட்டதே - ஆகையால்
காதலிக்காதே காதலி.
மறுபொழுதில் வேடிக்கை வினை ஆகிவிட்டதே - ஆகையால்
காதலிக்காதே காதலி.
உணர்வுகளை உள்ளங்கையில் கொண்ட உனக்கு
உணர்ச்சிகளைக் கையாளத் தெரியவில்லையே - ஆகையால்
காதலிக்காதே காதலி.
உணர்ச்சிகளைக் கையாளத் தெரியவில்லையே - ஆகையால்
காதலிக்காதே காதலி.
அனுபவ வாதிகளை நம்ப முடியாமல்
ஆணவ வார்த்தைகளை நம்புகிறாயே - ஆகையால்
காதலிக்காதே காதலி.
ஆணவ வார்த்தைகளை நம்புகிறாயே - ஆகையால்
காதலிக்காதே காதலி.
பண்பில் எழுந்திருந்தால் பரவாயில்லை ஆனால்
அன்பில் எழுந்து விட்டதே சந்தேகம் - ஆகையால்
காதலிக்காதே காதலி.
அன்பில் எழுந்து விட்டதே சந்தேகம் - ஆகையால்
காதலிக்காதே காதலி.
கோபம் காட்ட தெரிந்த உனக்கு
நியாயங் காட்ட தெரியாமல் போனதே - ஆகையால்
காதலிக்காதே காதலி.
நியாயங் காட்ட தெரியாமல் போனதே - ஆகையால்
காதலிக்காதே காதலி.
நெடுந்தூரம் சென்ற பின்பும் உன்னை
தொடுந்தூரம் என்றே நினைக்க கூடும் - எம்நினைப்பை
நீ காதலிக்காதே காதலி.
தொடுந்தூரம் என்றே நினைக்க கூடும் - எம்நினைப்பை
நீ காதலிக்காதே காதலி.
என் உணவு இறங்கும் முன்னே
உன் இரை நகர்ந்து விட்டதாயென்று - தோன்றும்
எம்நினைப்பை நீ காதலிக்காதே காதலி.
உன் இரை நகர்ந்து விட்டதாயென்று - தோன்றும்
எம்நினைப்பை நீ காதலிக்காதே காதலி.
சென்று விட்டாலும் நலமாயிரு என்சொல்லும்நீ
கொன்று விட்ட என் இதயத்தை - எப்போதும்
தவறிக்கூட காதலிக்காதே காதலி.
கொன்று விட்ட என் இதயத்தை - எப்போதும்
தவறிக்கூட காதலிக்காதே காதலி.
ஊர்க்கண்ணெல்லாம் உன்மீது விழுமென்
ஈன்றாளை சுற்றிப்போட சொல்ல விழைக்கும் - என்கண்ணை
ஒருபோதும் நீ காதலிக்காதே காதலி.
ஈன்றாளை சுற்றிப்போட சொல்ல விழைக்கும் - என்கண்ணை
ஒருபோதும் நீ காதலிக்காதே காதலி.
கண்ணுக்கு தெரியும் கவினைக் கண்டு
மனக்குன்றுக்குள் இருக்கும் கலைத்தாயை களைத்த - நீ
நம் காதலை காதலிக்காதே காதலி.
மனக்குன்றுக்குள் இருக்கும் கலைத்தாயை களைத்த - நீ
நம் காதலை காதலிக்காதே காதலி.
- பாரதி குமார்சுவாமி
Nice
பதிலளிநீக்குThanks
நீக்கு