களவாடிய பொழுதுகள் ~ இந்த படத்தில் வரும் நிகழ்வில் உங்கள் வாழ்க்கையில் ஒரு பொழுதாவது களவாடப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தங்கர் பச்சான் ஒரு தருணத்தில் பல்வேரின் வாழ்க்கையில் பயணித்து வருவது மறுக்க முடியாத உண்மை.. இந்த படத்தை இவ்வளவு இன்னல்களை தாண்டியும் வெளியிட செய்த இயக்குநருக்கு என் பாரட்டுக்கள்..
படத்தின் பல முக்கியமான பொறுப்புகளை தங்கர் பச்சான் சுமந்து செல்கிறார். அதில் ஒளிப்பதிவும் உள்ளடங்கும். சில அழுத்தமான காட்சிகளை வெளிக்கொணர்ந்து , மக்கள் மனதை ஒரு இடத்தில் கதையுடன் ஒன்றிணைய செய்கிறார்.
படத்தில் பல ஆங்கில சொற்களை தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் - நெறியாள்கை என்ற பொறுப்பையும் நேர்த்தியாக கையாண்டுள்ளார். இந்தப்படம் ஒரு குருநாவலில் இருந்து தழுவப்பட்டது என்று அறிந்தேன். அதில் தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்தப்படம் கொஞ்சம் மெதுவான திரைக்கதையை கொண்டு நகர்கிறது . பொதுவாக இந்த மாதிரி கதைக்கு இவ்வகை திரைக்கதை தேவை என்றாலும் இந்த காலத்தில் இந்த அளவுக்கு மெதுவாக போகும் திரைக்கதை மக்களுக்கு ஒரு இடத்தில் சலிப்புதட்டும் தன்மையை கொண்டு வருகிறது. 7 வருடங்களுக்கு முன்னமே எடுத்ததால் கூட இந்த செயல் நடந்து இருக்கலாம்.
பரத்வாஜ், இசை நன்றாகவே இந்த படத்தை தூக்கி நிறுத்தி உள்ளது. என்றாலும், சில இடத்தில் பின்னணி இசை இன்னும் நன்றாக அமைத்து இருக்கலாம் என்று தோன்றியது.
லெனின் செய்த படத்தொகுப்பு குறிப்பிடத்தக்கது.. நன்றாக கதையை உணர்ந்து தேவையான அளவு தொகுத்து இருக்கிறார். இவருக்கு தனிப்பாராட்டுகள்..
பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் ஆகிய அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கேற்ப எதார்த்தமாக நடித்துள்ளனர். பிரபுதேவாவுக்கு மனைவியாக வரும் கதாபாத்திரம், ஏழ்மையை கண்முன் நிறுத்தியது. கஞ்சா கருப்பு துணை கதாபாத்திரம் திரைக்கதையிலும் துணையாக நிற்கிறது. சத்யராஜ் - பெரியாரை கண்வழி காட்டுகிறார்.
பிரிந்து சென்ற காதலை திரும்ப சந்திக்கும் போது , இருவர்க்கிடையே உண்மையான அன்பு இருந்தும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையே களவாடிய பொழுதுகள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக