நித்தமென நான் சொல்ல;
பித்தமென்று அவள் உரைத்தாள்.
பித்தமென்று அவள் உரைத்தாள்.
ஒற்றுமையென நான் சொல்ல;
வேற்றுமையென்று அவள் உரைத்தாள்.
வேற்றுமையென்று அவள் உரைத்தாள்.
பாதியென நான் சொல்ல;
ஜாதியென்று அவள் உரைத்தாள்.
ஜாதியென்று அவள் உரைத்தாள்.
தாயமென நான் சொல்ல;
மாயமென்று அவள் உரைத்தாள்.
மாயமென்று அவள் உரைத்தாள்.
நிலவொளியென நான் சொல்ல;
நீயொழியென்று அவள் உரைத்தாள்.
நீயொழியென்று அவள் உரைத்தாள்.
காதலென நான் சொல்ல;
காமமென்று அவள் உரைத்தாள்.
காமமென்று அவள் உரைத்தாள்.
நாமென நான் சொல்ல;
நானென்று அவள் உரைத்தாள்.
அன்பென நான் சொல்ல;
பின்பென்று அவள் நகர்ந்தாள்.
பின்பென்று அவள் நகர்ந்தாள்.
- பாரதி குமார்சுவாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக