Thirai Kavingan

Thirai Kavingan
Do you like Cinema? then click on the image & like the page...

புதன், 24 ஜனவரி, 2018

அதாகப்பட்டது மகாஜனங்களே !

ஆம், நம் காதல் தோற்வுற்றது - எப்போது
நீ என்னை விட்டு வேறொருவனிடம் சென்று வெற்றிகண்டாயோ...

இல்லை, என் காதல் வெற்றிக்கண்டது - எப்போது
நீ என்னை வேறொருவனிடம் தேடி தோற்வுற்றாயோ....


இவ்வரிகளில் நாம் காண்பது இரண்டு விஷயங்கள்.

முதலானது, தோல்வியில் ஒரு வெற்றி!
இரண்டாவது, வெற்றியில் ஒரு தோல்வி!

கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா இரண்டாம் பொருள் நம்மை மகிழ்விக்கும். அதாவது நாம் வெற்றி அடைந்து விட்டோம். அதில் சிறிய தோல்விகள் நமக்கு நடந்து இருக்கலாம். அந்த இன்னலானது நாம் வரும் காலங்களில் சுலபமாக சமாளிக்கும் வகையிலும் இருக்கலாம். கிடைத்த பெருவெற்றியை பார்க்கும்போது நமக்கு ஏற்பட்ட சிறுதோல்வி நம்மை கலங்கவிடாது.. இதுவே, இயற்பு.

இதில் முதலாம் பொருளையும் நாம் எண்ணிவிட தயங்க கூடாது. (தயங்குபவன் வாழ்க்கையை யூகிக்க மறுத்தவனாக இருக்கலாம்.) இதில், ஒருவன் ஒரு பெரும்செயலில் தோற்றுவிட்ட போதிலும் அதில் சிறுவெற்றிக்கண்டு இருக்கலாம். அந்த சிறு வெற்றி, வரும் காலத்தில் ஒரு பெரும் புகழையும் தேடித் தரலாம். ஆகவே, தோல்வியை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் இரண்டாம் பொருளில் ஒன்றை கவனிக்க மறுத்திருக்கலாம். இரண்டாம் கவியில், என் காதல் என்று ஒருமை தான் தோன்றியது. ஆனால், தோல்வி அடைந்தாலும், முதல் கவியில் நம் காதல் (நாம்) என்ற பன்மை தோன்றியது. இன்னல்கள் பல இருந்தாலும் அதில் ஒரு ஒற்றுமை இருக்கக்கூடும்.

ஆகவே, அதாகப்பட்டது மகாஜனங்களே !
உங்கள் தோல்வியை சிறிதெனவும் காணவேண்டாம். உம் வெற்றியை பெரிதெனவும் காணவேண்டாம். இஞ்ஞாலத்தில் வெற்றியும் தோல்வியும் நிலையற்றது. உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்...
                  
                          - பாரதி குமார்சுவாமி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Review

விண்மீனே..