வெற்றியின் வழியே இவையும்கூடும்
கண்கவிழ்ந்துப்போராய்
வானத்தில்நீ
பெருமிதப்பட ;
கதையொன்றுச்
சொன்னாய்
கனாவொன்று கைகூட ;
ஓய்வுற்று
நின்றாய் முதற்வெற்றி
பறைசாற்ற;
பூச்சூடிக்கொண்டாய்
உயிர்கொல்ல கைநீள ;
நானென்றுச் சொன்னாய்
உன்னுயிருண்மை
வீணாக ;
மண்கூட்டி
சீர்படுத்து வான்செழிக்கும்
ஒப்புக்கொள் !
ஐயகற்றிநீரூற்று
தூய்மனக்கலையுண்டு
ஒப்புக்கொள் !
தனியிங்கே யேதடா
அலையால்
யாவும் மனக்கூட்டில்
ஒப்புக்கொள்!
நிலைநிற்க யிடமேதோ
வென்றிவாலில்
நீ வூண்ற
கண்பார்த்துப் போவதெல்லாம்
காற்றுவெளியிலே
கடந்தேபோகும் ஒப்புக்கொள்.
- ஹிரன் முருகேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக