பத்மாவத்(இ) திரைவிமர்சனம்
நாம் இதிகாச புராணங்கள் படித்துள்ளோம்..
அதில் பெரும்காவியங்கள் அனைத்தும் ஒரு பெண்ணை மையமாக வைத்தே நகர்ந்திருப்பதை நாம் காணலாம்.. அவ்வகை காப்பியங்களே மக்கள் மனதில் காவியங்களாய் பதிந்தும் உள்ளன.
உதாரணத்திற்கு சிலப்பதிகாரம் கணவன் கோவலன் மீது கண்ணகியின் பாசத்தையும், ராமாயணத்தில் சீதாதேவி ராமனின் மீது வைத்த நம்பிக்கையும், மகாபாரதத்தில் திரௌபதிக்காக பாண்டவர்கள் கௌரவர்கள் மீது போர் புரிந்து வென்றதை காணலாம். இவை அனைத்து காவியங்களும் பெண்களை மையமாக கொண்டே நகர்கிறது. அதேபோல், அந்த வரிசையில் வந்த பெண்மணி தான் பத்மாவதி.
இந்த கதையானது 12 ஆம் நூற்றாண்டில் நடக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த படம் மாலிக் முகமது ஜயசி எழுதிய பத்மாவதி என்னும் ஒரு காவியத்தில் இருந்து தழுவப்பட்டது.
சிங்களநாட்டின் பேரழகி பத்மாவதி, மேவார் நாட்டின் இளவரசன் ரதன் சிங்கிற்கு மணம் முடித்து தரப்படுகிறாள். அங்கு ராஜபுத்திரர்கள் அனைவரும் பத்மாவதியை தங்கள் இளவரசியாக மனம் ஒப்புக்கொள்கிறார்கள்.
நடக்கும் ஒரு சகுனி சூழ்ச்சியால் , மேவார் நாட்டின் குரு, டில்லி சுல்தான் அலாவுதீன் கில்சாவிடம் சென்று பத்மாவதியை தம்மிடம் அணைத்து கொண்டால் இந்த நாடே தம் வசமாகும் என்று கூறி பத்வாவாதிக்காக போர் அமைத்து விடுகிறான்.
இதுவே இந்த படத்தின் மூலக்கதை. இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் மூவர். பத்மாவதி, ரதன் சிங் , அலாவுதீன் கில்சா. மூவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.. திரையைப் பார்க்கும் போது நாமும் அந்த நூற்றாண்டில் இருக்கும் வண்ணம் கதையை நகர்த்துகிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.
பிரம்மாண்டத்தை கண்வழிகாட்டுகிறது ஒளிப்பதிவு. ஒளிப்பதிவார் சுதீப்க்கு வாழ்த்துக்கள். இவைக்கு ஒப்பாக அமைந்துள்ளது கலை மற்றும் உடை அலங்காரிப்பு. இவை அனைத்தும் அந்தந்த நாடுகளின் கலாச்சாரங்களை காட்டுகிறது.
பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் கதைக்கு ஒற்றுப்போகவும் ஒன்றியிருக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது. பல காட்சிகள் சென்சாரில் போகி இருந்தாலும் படத்தின் ஓட்டத்தையும் கதையையும் பாதிக்காதவண்ணம் அமைந்துள்ளது படத்தொகுப்பு.
பொதுவாக உடன்கட்டை ஏறல் (sati) குறித்து பல பேருக்கு பல கருத்துக்கள் இருக்கும். கணவன் இறந்த பின்னர் மனைவி, தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் இந்த சடங்காக இந்து மதத்தில் இருந்தது.
இந்த சடங்கானது இரண்டு வகையில் அமைந்தது. ஒன்று, தன் கணவனை இழந்த மனைவி, இனிமேல் அவரின் பாதியாகிய
தான் இருந்து பயனொன்றுமில்லை என்று தானாகவே தீக்குழியில் இறங்கி மாய்த்து கொள்ளுதல். இரண்டாவது, விருப்பம் இல்லாவிட்டாலும் ஊரார் அனைவரும் அந்த பெண்ணை தீக்குழியில் இறக்கி விடுவது.
தான் இருந்து பயனொன்றுமில்லை என்று தானாகவே தீக்குழியில் இறங்கி மாய்த்து கொள்ளுதல். இரண்டாவது, விருப்பம் இல்லாவிட்டாலும் ஊரார் அனைவரும் அந்த பெண்ணை தீக்குழியில் இறக்கி விடுவது.
இந்த படத்தில் இவை இரண்டும் இன்றி தன் நாட்டுக்காக மாய்த்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. ராஜபுத்திரர்கள் எதற்கும் சலித்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கிறது.
அனைவரின் கதாபாத்திர அமைப்பையும் அழகாக அமைத்துள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி. அதில் மிக முக்கியமான கதாபாத்திரம் அலாவுதீன் கில்சா. ரன்வீர் சிங் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
கடைசி காட்சியில் மேலோங்கி நிற்கும் தீபிகா படுகோன், பத்மாவதியாகவே வாழ்ந்துள்ளார்.
மொத்தத்தில் இந்த பிரம்மாண்டத்தை திரையில் பார்க்க ஒரு காவியத்தை கண்முன் பார்ப்பதை போலவே இருக்கும். பத்மாவத் ஒரு அழகு சிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக