கிழிந்தப் புடவை என்றாலும்,மடி சேரும் நொடி எனக்கு மறக்கமுடியாத படுக்கை அம்மா...!
வானத்தை சுருட்டி பாய்மடி வேண்டாம்,அந்த வானத்தையே கண்டு ரசிக்க தாய்மடி வேண்டும்!
உன் ரத்தம்தான் உணவென்றால் பால்மடி வேண்டாம்,உன் முத்தங்கள் வாங்கிட வாஞ்சையோடு கேட்கிறேன் தாய்மடி வேண்டும்!
தேனிலவைக் காட்டுகிற தேவதைகளோடு ஓர்நொடி வேண்டாம்,தேம்பி அழும் தேய்பிறை எனக்கு தாய்மடி வேண்டும்!
மடிந்தாலும் நின் மடியினிலே மடிய வேண்டும்.மடிந்தபின்னும் மண்ணாக மாறும் வரை,நின் மடி தழுவிய புடவையோடு மடியவே மண்டியிட்டுக் கேட்டிடுவேன் மரணத்திடம்...!
-த.தமிழரசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக