ஞாயிறு, 31 டிசம்பர், 2017
பலூன் திரை விமர்சனம் !
சனி, 30 டிசம்பர், 2017
உள்குத்து திரை விமர்சனம்!
படத்தை சுருக்கமாக தொகுப்பமைத்த படத்தொகுப்பாளர் பிரவீன் K. L க்கு பாராட்டுக்கள்.
ஒருவனை அடித்ததால் கெத்து வராது! தன் குடும்பத்தை காத்தால் தான் வரும் கெத்து! இதை சொல்கிறது உள்குத்து!
வெள்ளி, 29 டிசம்பர், 2017
களவாடிய பொழுதுகள் - திரைவிமர்சனம்
வெள்ளி, 22 டிசம்பர், 2017
வேலைக்காரன் - 'தாய்' நாவலின் கிளர்ச்சி !
தொடக்கத்தில் மெதுவாக கதைக்குள் அடியெடுத்து வைத்தாலும்,முதல் பாதி கதையோடு ஒருங்கிணைவதற்கு கொஞ்சம் கடினமாகவே இருந்தது.. ஆனால் இரண்டாம் பாதியில் என்னை அறியாமல் நான் படத்தோடு ஒன்றினேன். அதற்கு முக்கியமான காரணம், இந்த படமானது என்னை மாறியும், உங்களை மாறியும் ஒரு வேலைக்காரனின் கதையாவதால்.... இதுவே, இந்த படத்தின் வெற்றியென கருதுகிறேன்.
இந்தப்படத்தை பார்த்தவுடன் எனக்கு மார்க்ஸிம் கார்கியால் எழுதப்பட்ட தாய் நாவல் ஞாபகத்திற்கு வந்தது.. ஆனால் இது அந்த கதையை குறிக்கிறது என்று சொல்ல வரவில்லை. அந்த நாவலில் பாவெல் எப்படி தன் தாயிடம் தன் கருத்துக்களை கொண்டு அவளை ஈர்க்கிறானோ, அதேபோல அனைத்து வேலைக்காரர்களையும் ஈர்ப்பதே இந்தப்படம்.
இந்த நவீன வாழ்க்கையில் நாம் நம் உழைப்பை மட்டும் நம்பி வாழ்கிறோம். அதற்க்காக எதையும் செய்ய தயாராகவும் உள்ளோம். இந்த நிலையில் இருக்கும் நாம், நம்மை வேலைக்காரனாக மட்டுமே பார்க்கிறோம். நாம் வெறும் 8 மணி நேரம் மட்டுமே வேலைக்காரனாக இருக்கிறோம். மற்ற நேரத்தில் நுகர்வோராகவே வாழ்கிறோம்.
இந்த நிலையில் இருந்து நாம் செய்யும் வேலைக்கு நாமே நுகர்வோராகும் நிலையை குறித்து யோசிக்க வைக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. எப்படி தாய் நாவல் ஒரு புரட்சிக்கு விதையாக அமைந்ததோ, அதேபோல் இந்தப்படம் நாம் செய்யும்
வேலையின் மாற்றத்தின் புரட்சிக்கு ஒரு சாம்பிளாக அமையும் என்று மோகன் ராஜா நம்புகிறார்.
பல குறிப்புகளை சேமித்து இந்த கதையை எழுதியுள்ளார் என்று படத்தில் தெரிகிறது. ஆனாலும் கதையின் முதல் பாதி சற்று அதிகமாக உள்ளது போல உணர்ந்தேன். பல உதவி இயக்குநர்கள், பல்வேறு நடிகர்கள், பல தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றவர்களிடம் வேலைவாங்கி நல்ல வேலைக்காரன் என்ற பட்டத்தை வென்றுள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.
அடுத்த இடத்தை கலை இயக்குநர் முத்துராஜ் பெறுகிறார். மிக தத்ரூபமான செட்டுகளை
அமைத்துள்ளார். அடுத்து, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், இவர் அமைத்த பின்னணி இசைதான் ஒரு கட்டத்தில் படத்தை ஏற்றி நிறுத்துகிறது. ஒளிப்பதிவாளர் ராம்ஜி கதைக்கு தேவையானதை அழகாக கொடுத்துள்ளார். படத்தொகுப்பாளர் ரூபன் , முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் ட்ரிம் பண்ணி இருந்தால் இன்னும் சுறுசுறுப்பாக இருந்திருக்கும்.
கதாப்பாத்திரங்கள் என்று வந்தால் முதல் இடத்தை புடிக்கிறார் பகத் பாசில். தனது புத்திசாலித்தனம் கலந்த வில்லாதனத்தை மிக எதார்த்தமாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் தனிஒருவன் படத்தில் வரும் சித்தார்த் அபிமன்யூ என்னும் அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தை நினைவூட்ட மறுக்கவில்லை.
சிவகார்த்திகேயன் பொதுவாக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படத்தில் நடிப்பவர் என்று மக்கள் அவர்மீது வைத்திருந்த பார்வையை இந்தப்படத்தில் உடைத்துள்ளார். தன் அறிவு கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டு நடித்துள்ளார்.
நயன்தாரா தனக்கு கொடுத்த திரைப்பகுதியில் தனது சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரத்தை அழகாக நடித்து கைதட்டல்களை பெறுகிறார். சினேகா தன் நடிப்பில் இத்தனை ஆண்டு காலம் தனக்கு கிடைத்த முதிர்ச்சியை முத்திரை பதிக்கிறார்.
இதையடுத்து பிரகாஷ்ராஜ், விஜய்வசந்த், சார்லீ, ரோகினி, R. J.பாலாஜி, ரோபோ சங்கர், சதீஷ் போன்ற அனைத்து கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை கதாபாத்திரத்திற்கு ஏற்ப கொடுத்துள்ளனர்.
இந்த மாதிரியான படைப்பினை உருவாக்க உறுதுணையாக இருந்த 24AM ஸ்டுடியோ நிறுவனத்தின் மேலாளர் திரு. R.D ராஜா அவர்களுக்கு பாராட்டுகள்.
தன் முதலாளிக்கு கொடுக்கும் விசுவாசத்தை வேலையில் செலுத்தி பார்க்க சொல்லும் முயற்சியே வேலைக்காரன் !
திங்கள், 18 டிசம்பர், 2017
மாயவன் திரைவிமர்சனம்
இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. அவ்வாறு ஒரு விஞ்ஞானி தன் வாழ்க்கையின் நினைவுகளை ஒரு hard disk-ல் பதித்துக்கொண்டு வேறு ஒருவரின் நினைவுகளை அழித்து அவன் வாழ்க்கையை வாழ்கிறான். இந்த மாயமான பின்னணியை உடைய மாயாஜால மனிதனை குறித்த கதைதான் மாயவன்.
மாயவன் ஒரு மாயாஜால மேடை !
சனி, 16 டிசம்பர், 2017
அருவி திரைவிமர்சனம்
கிடைத்துவிட்டது.. பார்த்துவிட்டேன். (மீண்டும் பார்ப்பேன்).
வாழ்க்கை மகிழ்வாகும்.
சத்யா திரைவிமர்சனம்
இந்த திரைப்படம் தெலுங்கில் கடந்த வருடம் Kshanam என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் ரீமேக் படமாகும். ரீமேக் படம்தானே சுலபமாக எடுத்து விடலாம் என்று சிலர் எண்ணுவீர்கள்.ரீமேக் படம் என்றால் சுலபமல்ல அதில் நிறைய சிக்கல்கள் ஒழிந்துள்ளன. அதை நேர்த்தியாக எடுத்த இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகள்.
படம் தொடங்கிய 5 நிமிடத்திலேயே கதைக்குள் சென்று விடுவது மற்ற படங்களில் தரும் சலிப்பை தவிர்த்தது.விறுவிறுப்பான கதையில் அவ்வப்போது முன்கதையில் வரும் காதல் பகுதி சற்று குறைத்து இருக்கலாம் என்றே தோன்றியது.
கதைக்கு பக்கபலமே ரியா கௌதம் என்ற பெண்ணை கடத்தியது யார்? எதற்காக? என்ற கேள்வி கடைசி வரும் தெரியாதிருக்கும் சஸ்பென்ஸ் தான்.
ரம்யா தன்னை உலகம் பைத்தியம் என்று எண்ணுவது தவிர தான் காதலனும் நம்புகிறான் என்ற தவிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
சில இடங்களில் மிக துல்லியமாக அமைத்திருப்பதை உணரமுடிகிறது. ஒளிப்பதிவு கதைக்கு தேவை என்னவோ அதை திரையில் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. படத்தொகுப்பு நன்றாகவே இருந்தது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் படத்தை சுருக்கிருந்தால் இன்னும் மிருதுவாக இருந்திருக்கும்.