Thirai Kavingan

Thirai Kavingan
Do you like Cinema? then click on the image & like the page...

திங்கள், 29 ஜனவரி, 2018

பிச்சைக்காரன்

துச்சமாக எண்ணிவிட்டு - எங்களைஉம்
சுருக்குப்பையில் அடைத்து விடாதே!

அச்சமுண்டு என்றெண்ணி - எங்களைஉம்
கீழ்ப்படிய நடத்தி விடாதே!

துளிரென்று தம்மையெண்ணி - எங்களைஉம்
மருவில் கிள்ளி விடாதே!

தீண்டாதவனென்று தம்மையெண்ணி -எங்களைஉம்
வாழ்வைவிட்டு ஒதுக்கி விடாதே!

வழிப்போக்கனென்று தங்களையெண்ணி - எங்களைஉம்
ஊருள்சேர்க்க மறுத்து விடாதே !

பிச்சைக்காரனென்று தங்களையெண்ணி - எங்களுக்குஉம்
இச்சைக்காசை போட தயங்காதே !

உனக்கெனக்கும் வேற்றுமையுண்டெனில் -அடித்துபிடுங்கும்உம்
காசை நான் கேட்டுபறிக்கிறேன்.

என்னுள்பரவி ஒளிந்திருக்கும் - நிம்மதிஉம்
மனதை பணமிருந்தும் கவரமறுக்கிறது.

என்ன உலகடா சாமி !

கல்லில் இறையை தேடும் பலருள்
களியில் தேடும் ஒருவன் !

பணத்தில் வளங்களை தேடும் பலருள் 
பசியில் தேடும் ஒருவன் !

ஆம், நான் பிச்சைக்காரன்.



Pichaikkaran

Thuchchamaga ennivittu - engalai~um
Surukkupaiyil adaithuvidathae !

Acchamundu endrenni - engalai~um
Keezhpadiya nadathividathae !

Thulirendru thammaiyenni - engalai~um
Maruvil killividathae !

Theendathavanendrennru thammaiyenni - engalai~um
Vaazhvaivittu othukkividathae !

Vazhippokkanendru thammaiyenni - engalai~um
Oorulserkka maruthuvidathae !

Pichaikkaranendru thangalaiyenni - engalukku~um
Ichchaikaasai podathayangathae !

Unakenakkum vettrumaiyundenil - adithuppidungum~um
KaasaiNaan kaetuparikkiraen.

EnnulParavi olinthirukkum - Nimmathi~um
Manathai Panamirunthum kavaramarukkiradhu. 

Enna Ulagada Saami !

Kallil Iraiyai Thedum Palarul
Kaliyil Thedum Oruvan !

Panathil Valangalai Thedum Palarul
Pasiyil Thedum Oruvan !

Yes, I am Begger !


ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மன்னர் வகையறாவின் வம்ச சரித்திரம்..

 மன்னர் வகையறா - திரை விமர்சனம்

நாம் இன்றைய காலகட்டத்தில், பணத்திற்காகவும், தொழில்மயத்திற்காகவும் பல உன்னதமான உணர்வுகளை மறந்து விடுகிறோம். அந்த வகையில் முக்கியமான ஒன்று தான் கூட்டுக் குடும்பம்.

20 ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தில் கூட்டுக் குடும்பத்திற்கு ஒரு முக்கிய இடத்தை மக்கள் கொடுத்து இருந்தனர். அது அன்றைய காலகட்டங்களில் வெளிவந்த படங்களில் கூட பிரதிபலித்திருந்ததை நாம் காணலாம். 80 , 90களில் இயக்குநர் விக்ரமன் போன்றவர்கள் குடும்ப கதைக்கென்றே தனி முத்திரையும் பதித்தார்கள்.

ஆனால் 21-ம் நூற்றாண்டில் கதை அப்படியே மாறிப்போனது. பேஷன் என்று சொல்லிக்கொண்டு தனிக்குடும்பங்கள் பல எழத்தொடங்கின. இந்த நூற்றாண்டில் அவ்வகை படங்களை காண்பதென்பது அரிதான ஒரு செயலே.
 
சீனு ராமசாமி,ராசு மதுரவன் போன்ற சில இயக்குநர்கள் மட்டுமே தென்மேற்கு பருவக்காற்று, முத்துக்கு முத்தாக போன்ற படைப்புகளை தந்து வருகின்றனர். அதும் வருடத்திற்கு ஒரு படம் வருவதே கேள்விக்குறியாக உள்ளது.

அவ்வாறான இந்த காலக்கட்டத்தில் ஒரு குடும்பக்கதையை எடுத்தற்கு இயக்குநர் பூபதி பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பொதுவாக ஒரு வீடு என்றால் அதில் இன்பம் துன்பம் என்ற வகையில் சந்தோசம், சண்டை, நகைச்சுவை, பாசம், பகை போன்ற அனைத்து விசயங்களும் அடங்கி இருக்கும். அதுபோலவே இந்த படத்திலும் அனைத்தும் கலந்த கலவையாக இயக்குநர் இயக்கியுள்ளார்.

கதையின் முதல் பாதியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் கதை மெதுவாகவே நகர்ந்தது. அதற்கு இடையில் ரோபோ சங்கரின் காமெடி வேறு ஆங்காங்கே சிரிப்பே வராமல் கதையை எடுத்து சென்றது. முதல் பாதி கொஞ்சம் இழுவை தான்.

இரண்டாம் பாதியில் கதை சற்றே விருவிருப்பானது. ஏற்கனவே சொன்னாற் போல் குடும்பத்தில் நிகழும் நகைச்சுவை காட்சிகள் இதில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

படத்தின் நிறை என்று பார்க்கும் போது, படத்தின் கதை மட்டும் முதுகெலும்பாக நிற்கிறது.

படத்தின் குறை என்று பார்க்கையில், திரைக்கதை முதல் பாதியில் இழுவை, மெதுவான திரைக்கதை, உதடு ஒத்திசைவு (lip sink), தொடரும் பொருள் (continuation) போன்றவற்றில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவை முத்தையா, சுராஜ் நல்லசாமி, ஆகிய இருவரும் செய்துள்ளனர். இரண்டு பேர்கள் செய்யும் அளவிற்கு ஒளிப்பதிவு அவுட் அவ்வளவு அழகாக எல்லாம் இல்லை. அடிக்கடி தேவையில்லாத பின் ஒளி (back light) ஒன்று மூலப்பொருள் (source) இல்லாமலே தோன்றி சலிப்பை உண்டாக்குகிறது.

படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா இன்னும் படத்தை சுருக்கி இருக்கலாம். தேவை இல்லாத பல காட்சிகள் படத்தில் தோன்றி உள்ளன. சண்டைக்காட்சிகளில் அடிக்கடி டுபுக் டுபுகென்று விட்டுவிட்டு வருகிறது. அதற்கென தனியாக சிறப்பு சப்தம் வேறு.

இசையமைப்பாளர் ஜெக்ஸ் பெஜோய் சில இடங்களில் பின்னணி இசையின் மூலம் உயர்ந்து நின்றாலும், பல இடங்களில் இசை கொஞ்சம் கதைக்கு ஒப்பமலே இருக்கிறது.பாடல்கள் வரும் போது சில பார்வையாளர்கள் திரையை விட்டு வெளியே சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த கதையின் பக்கபலமாக இருப்பது பிரபு, சரண்யா, ஜெய பிரகாஷ் போன்ற நடிகர்களே. அவர்களது நடிப்பே கதைக்கு எதார்த்த தன்மையை ஊட்டுகிறது.

ரோபோ சங்கர் மாரி தனுஷ் கெட்டப்பில் கஷ்டப்பட்டு முதல் பாதியில் காமெடி செய்து இருந்தாலும் அது மக்களிடையே வரவேற்பு அடையவில்லை என்பதே உண்மை. சொல்லப்போனால் அவரது காட்சியே முதல் பாதியை மேலும் மெதுவாக்குகிறது.

விமலின் அண்ணனாக நடித்திருக்கும் கார்த்திக் தனது கதாப்பாதிரத்தை சரியாக செய்துள்ளார். ஆனந்தி தனது சுட்டித்தனமான நடிப்பில் கோட்டை விட்டாலும், குடும்பக் காட்சிகளில் வென்று விடுகிறார்.

விமல் தந்து கதாபாத்திரத்தை நீதியுற விளக்கி நடித்துள்ளார். இருந்தாலும், சில இடங்களில் இன்னும் கூட நடிப்பை நிலை நாட்டி இருக்கலாம். இவரது திரைப்படத்தில் இது ஒரு முக்கியமான திரைப்படமாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில், கூட்டுக் குடும்பத்தை மறந்து வசிக்கும் தனிக்குடும்பங்களுக்கு ஒரு கருத்தையும், கூட்டுக் குடும்பங்கள் அனைவரும் ஒரு தடவை பார்க்க கூடிய பொழுதுபோக்கையும் கொடுக்கும் இந்த மன்னர் வகையறா...


Mannar Vagaiyara - Review

naam indraiya kaalakatangalil, panathirkaagavum, tholi mayathirkaagavum, pala unnathamana unarvukalai maranthu virukirom. antha vakaiyil mukkiyamana ondru thaan kootu kudumbam.

20 aam nootraandin kaalakattathil kootukudmbam enbatharku oru mukkiya idam irunthathai naam antha kaalakkatta padathai paarthal arinthu kollalam.

80s , 90s kalil director vikraman pondravarkal kudumba kathaikendre oru idaithai petrirunthanar. aana 21st centuryiyil  kathai appadiye maaripponathu. fashion endru sollikondu pala thanikudumbangal ezha thodangina.

intha centuriyil antha vakai padangalai kaanbathu arithaana oru visiyame.seenu ramasamy , raasu mathuravan pondra iyakkunarkal thenmerku paruvakkatru, muthkku muthaga pondra padangalai thanthu varugindranar.athum  Varudathirku oru murai varuvathenbathe kelivikuriyaka ullathu.

avvarana kalakkatathil intha vakaiyana kudumba kathaiyai iyakkiya director boopathy pandiyan avarkalukku vaazhthukkal.

pothuvaaga veedu endraal inbam, thunbam endra vakaiyil santhosam, sandai,  nakaichuvai, pasam, pakai pondra anaithu visiyangalum adangi irukkum. athu polave intha padathilu, anaithum kalantha kalavaiyakave iyakkunar koduthullar.

kathaiyin muthal paathiyai patri solla vendum endral , kathai mikavum methuvagave nakarnthathu. irandaam paathiyil kathai satre viruviruppaanathu. erkane sonnathu pola kudumbathil nadakkum comedy scenes ithil nandraka workout aagi ullathu.

padathin plus endru paarkkum pothu , kathaiye backone aga irukkirathu. minus endru paarkaiyil, slow screenplay, lip sink, continuation, pondravatril melum kavanam selhi irukkalam.

ipadathirkku cinematography Muthiah, suraj nallasamy aakiya iruvarum seithullanar. irandu perkal seitha alavirku out avlav alaga illai. adikkadi thevaiye illada back light ondru source kuda illamal vanthu vanthu pogirathu. ithuve sallipai undaakukirathu.

Music diector Jakes Bejoy sila idangalil pinnani isaiyin moolamaga uyarnthu ninralum, pala idangalil, isai konjam story ku sink agamale irukkirathu.

Editor Gopi krishna innum padathai trim seithu irukkalam. adikadi dubuk dubukendru screenil oli vitu vitu varukirathu. atharku thaniyaka special sounds vera..

intha kathaiyi pakka balamaga iruppathu prabhu, saranya and jayaprakash acting dhaan. avarkalathu nadippe kathaikku ethartha thanmaiyai alikkirathu.

Robo sankar comedy workout agavillai. Karthik avarathu character paalagatha vannam nadithullar.
aanandhi thanathu suttithanamana nadippil miss pani irundalum, kudumba kathai nikalum idathil score seithu vidukiraar.

vimal thanathu characterisation ku justice agave nadiththullar. irundalum, innum kooda nadippai nilai naati irukkalam. avarathu filmography-il intha padam oru important padamagave amaiyum.

mothathil, joint family-ai maranthu vasikkum thani kudumbangalukku oru message-um , joint familykku oru entertainment kandippaga kudukkum intha mannar vagaiyara...

---*---




சனி, 27 ஜனவரி, 2018

'நிமிர்'ந்த திரையாக்கம்

நிமிர் திரைவிமர்சனம்

நாம் இயங்கும் இந்த வேகமான வாழ்வில், சுலபமாகவும் குளிர்ச்சியாகவும் கிடைதற்குரிய  எண்ணற்ற மற்றும் புரிதல்களுக்கு உரிய பல அன்றாட நிகழ்ச்சிகளை கவனிக்க மறந்து போகிறோம்.

பறந்து விரிந்த வானமாயினும் சரி, சவங்களை குவிக்கும் மாயானமாயியும் சரி, எல்லாவற்றிலும் நாம் உணரக்கூடிய பல புரிதல்களை வாழ்க்கை ஓட்டத்தில் விட்டு விடுகிறோம்.

இவ்வகை புரிதல்களை நாம் காசு கொடுத்து ஒன்றும் வாங்க போவதில்லை. ஆனால் உணர்தலால் வாழ்க்கை பற்றிய புரிதல்கள், மனதில் மட்டுமல்ல கண்களிலும் விருந்தளிக்க தவறுவதில்லை.

இவ்வகை புரிதல்கள் எந்த வயதிலும் ஒருவனின் மூளைக்கு எட்ட வரும். ஏன், எட்ட வராமலும் கூட போகலாம். ஒரு சிறந்த தந்தையின் வளர்ப்பு என்பது நல்லது கெட்டதை மட்டும் கற்றுக்கொடுப்பதல்ல. தந்தையானவன், வாழ்க்கையைப் பற்றிய புரிதலும், அவை தன் மகனுக்கு உணர ஒரு ஊன்றுகோளாகவும் இருத்தல் வேண்டும்.
அந்த வகையில் அமைந்த கதையாக அமைகிறது நிமிர்

மகேந்திரன் அவர்களின் அழுத்தமான கதாபாத்திர அமைப்பும் , அவரது நடிப்பும் என் மனதை உள்ளுர கவரந்தது. ஒருவனின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் சக்தி இந்த இயற்கைக்கு உள்ளது என்ற சொல்லை நிரூபிக்கிறது.

நகரங்களில் வசிக்கும் இந்த வாழ்க்கையை விட்டு ஒரு இரண்டு மணிநேரம் அழகான  கிராமத்திற்கு விருந்தினராக அழைத்து சென்று இயற்கையை விருந்தளிக்கிறது நிமிர்.

Maheshinte Prathikaaram என்ற ஒரு மலையாள படத்தின் ரீமேக் தான் நிமிர். ரீமேக் படம் தானே என்ற இந்த படத்தை தவிர்க்க முடியாது. பொதுவாக ரீமேக் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. அசல் படம் போல வரவில்லை என்றாலும் அந்த படத்தின் பெயரை கெடுக்காத வண்ணம் அமைந்தாலே போதும் என்று கஷ்டப்படும் இயக்குநர்கள் பலருண்டு.
அவ்வகையில் அமைந்த படமே நிமிர். 

இயக்குநர் பிரியதர்ஷன் அந்த படத்திற்கு ஒரு கேடு வராத வண்ணமே படத்தை முடித்துள்ளார். பல மலையாள படங்களை எடுத்த இவருக்கு இந்த தமிழ் படம் ஒரு புது அனுபவமாகவே அமைந்திருக்கும்.

பச்சை பசேலென்று இருக்கும் கிராமங்களிலும் கூட பல்வகை வண்ணங்களை திரைக்கு கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கதை ஒரு சிறிய பிரச்சனையை நோக்கி மெதுவாக நகர்ந்தாலும், தனது மிருதுவான படத்தொகுப்பின் மூலம் மேலும் அழக்கூட்டுகிறார் படத்தொகுப்பாளர் அய்யப்பன் நாயர்.

பின்னணி இசையின் மூலம் கதையை விறுவிறுப்பாக மாற்றுகிறார் ரோனி ரபேல்.
பாடல்கள் அனைத்தும் படத்தின் கதையையும், நகரும் இடத்தையும் அறிந்து இசையமைத்துள்ளார் தர்புக்கா சிவா.

பொதுவாக சமுத்திரக்கனி படத்தில் வசனங்கள் அனைத்தும் நேராகவும், குறிப்பாகவும் இருக்கும். இந்த படத்தில் தேவையான இடத்தில் மட்டும் கருத்துக்களை அச்சிடுகிறார்.

குணச்சித்திர பாத்திரம் என்றாலும், 8 தோட்டாக்கள் படத்திற்கு அடுத்து ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் M.S.பாஸ்கர். தப்பு செய்தாலும் வெள்ளந்தியாக வாழும் கருணாகரன் பாத்திரம் ஒரு தப்பான கண்ணோட்டத்தை வெளி நகர்த்துகிறது.

பார்வதி நாயர் முதல் பாதியில் தோன்றி கதாநாயகன் வாழ்க்கை இரண்டாம் பகுதியில் மாற்ற வழிவகுக்கிறார். நமிதா ப்ரமோத் தமிழில் அறிமுகமானாலும் தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் பார்வையாளரை கவர்கிறார்.

பகத் பாசில் அளவிற்கு நடிக்கவில்லை என்றாலும், முந்தைய படங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் முன்னேறி உள்ளார். மனிதன் திரைப்படத்திற்கு அடுத்து இந்த திரைப்படம் உதயநிதி படங்களின் வரிசையில் ஒரு அழுத்தமான இடத்தை பதித்துள்ளது.

நிமிர் -  வாழ்க்கையில் ஒளிந்துள்ள இயற்க்கை.


வெள்ளி, 26 ஜனவரி, 2018

சீதாதேவி, திரௌபதி வரிசையில் பத்மாவதி!

பத்மாவத்(இ) திரைவிமர்சனம்

நாம் இதிகாச புராணங்கள் படித்துள்ளோம்..

அதில் பெரும்காவியங்கள் அனைத்தும் ஒரு பெண்ணை மையமாக வைத்தே நகர்ந்திருப்பதை நாம் காணலாம்.. அவ்வகை காப்பியங்களே மக்கள் மனதில் காவியங்களாய் பதிந்தும் உள்ளன.

உதாரணத்திற்கு சிலப்பதிகாரம் கணவன் கோவலன் மீது கண்ணகியின் பாசத்தையும், ராமாயணத்தில் சீதாதேவி ராமனின் மீது வைத்த நம்பிக்கையும், மகாபாரதத்தில் திரௌபதிக்காக பாண்டவர்கள் கௌரவர்கள் மீது போர் புரிந்து வென்றதை காணலாம். இவை அனைத்து காவியங்களும் பெண்களை மையமாக கொண்டே நகர்கிறது. அதேபோல், அந்த வரிசையில் வந்த பெண்மணி தான் பத்மாவதி.

இந்த கதையானது 12 ஆம் நூற்றாண்டில் நடக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த படம் மாலிக் முகமது ஜயசி எழுதிய பத்மாவதி என்னும் ஒரு காவியத்தில் இருந்து தழுவப்பட்டது. 

சிங்களநாட்டின் பேரழகி பத்மாவதி, மேவார் நாட்டின் இளவரசன் ரதன் சிங்கிற்கு மணம் முடித்து தரப்படுகிறாள். அங்கு ராஜபுத்திரர்கள் அனைவரும் பத்மாவதியை தங்கள் இளவரசியாக மனம் ஒப்புக்கொள்கிறார்கள்.

நடக்கும் ஒரு சகுனி சூழ்ச்சியால் , மேவார் நாட்டின் குரு, டில்லி சுல்தான் அலாவுதீன் கில்சாவிடம் சென்று பத்மாவதியை தம்மிடம் அணைத்து கொண்டால் இந்த நாடே தம் வசமாகும் என்று கூறி பத்வாவாதிக்காக போர் அமைத்து விடுகிறான்.

இதுவே இந்த படத்தின் மூலக்கதை. இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் மூவர். பத்மாவதி, ரதன் சிங் , அலாவுதீன் கில்சா. மூவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.. திரையைப் பார்க்கும் போது நாமும் அந்த நூற்றாண்டில் இருக்கும் வண்ணம் கதையை நகர்த்துகிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

பிரம்மாண்டத்தை கண்வழிகாட்டுகிறது ஒளிப்பதிவு. ஒளிப்பதிவார் சுதீப்க்கு வாழ்த்துக்கள். இவைக்கு ஒப்பாக அமைந்துள்ளது கலை மற்றும் உடை அலங்காரிப்பு.  இவை அனைத்தும் அந்தந்த நாடுகளின் கலாச்சாரங்களை காட்டுகிறது.

பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் கதைக்கு ஒற்றுப்போகவும் ஒன்றியிருக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது. பல காட்சிகள் சென்சாரில் போகி இருந்தாலும் படத்தின் ஓட்டத்தையும் கதையையும் பாதிக்காதவண்ணம் அமைந்துள்ளது படத்தொகுப்பு.

பொதுவாக உடன்கட்டை ஏறல் (sati) குறித்து பல பேருக்கு பல கருத்துக்கள் இருக்கும். கணவன் இறந்த பின்னர் மனைவி, தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் இந்த சடங்காக இந்து மதத்தில் இருந்தது.

இந்த சடங்கானது இரண்டு வகையில் அமைந்தது. ஒன்று, தன் கணவனை இழந்த மனைவி, இனிமேல்  அவரின் பாதியாகிய
தான் இருந்து பயனொன்றுமில்லை என்று தானாகவே தீக்குழியில் இறங்கி மாய்த்து கொள்ளுதல். இரண்டாவது, விருப்பம் இல்லாவிட்டாலும் ஊரார் அனைவரும் அந்த பெண்ணை தீக்குழியில் இறக்கி விடுவது.
இந்த படத்தில் இவை இரண்டும் இன்றி தன் நாட்டுக்காக மாய்த்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. ராஜபுத்திரர்கள் எதற்கும் சலித்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கிறது.

அனைவரின் கதாபாத்திர அமைப்பையும் அழகாக அமைத்துள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி. அதில் மிக முக்கியமான கதாபாத்திரம் அலாவுதீன் கில்சா. ரன்வீர் சிங் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

கடைசி காட்சியில் மேலோங்கி நிற்கும் தீபிகா படுகோன், பத்மாவதியாகவே வாழ்ந்துள்ளார்.


மொத்தத்தில் இந்த பிரம்மாண்டத்தை திரையில் பார்க்க ஒரு காவியத்தை கண்முன் பார்ப்பதை போலவே இருக்கும். பத்மாவத் ஒரு அழகு சிலை. 


வியாழன், 25 ஜனவரி, 2018

இதையும் ஏற்று




வெற்றியின் வழியே இவையும்கூடும்

கண்கவிழ்ந்துப்போராய்
வானத்தில்நீ
பெருமிதப்பட ;
கதையொன்றுச்
சொன்னாய்
கனாவொன்று கைகூட ;
ஓய்வுற்று
நின்றாய் முதற்வெற்றி
பறைசாற்ற;
பூச்சூடிக்கொண்டாய்
உயிர்கொல்ல  கைநீள ;
நானென்றுச் சொன்னாய்
உன்னுயிருண்மை
வீணாக ;



மண்கூட்டி
சீர்படுத்து வான்செழிக்கும்
ஒப்புக்கொள் !
ஐயகற்றிநீரூற்று
தூய்மனக்கலையுண்டு
ஒப்புக்கொள் !
தனியிங்கே யேதடா
அலையால்
யாவும் மனக்கூட்டில்
ஒப்புக்கொள்!
நிலைநிற்க யிடமேதோ
வென்றிவாலில்
நீ வூண்ற
கண்பார்த்துப் போவதெல்லாம்
காற்றுவெளியிலே
கடந்தேபோகும் ஒப்புக்கொள்.
            - ஹிரன் முருகேசன்



புதன், 24 ஜனவரி, 2018

அதாகப்பட்டது மகாஜனங்களே !

ஆம், நம் காதல் தோற்வுற்றது - எப்போது
நீ என்னை விட்டு வேறொருவனிடம் சென்று வெற்றிகண்டாயோ...

இல்லை, என் காதல் வெற்றிக்கண்டது - எப்போது
நீ என்னை வேறொருவனிடம் தேடி தோற்வுற்றாயோ....


இவ்வரிகளில் நாம் காண்பது இரண்டு விஷயங்கள்.

முதலானது, தோல்வியில் ஒரு வெற்றி!
இரண்டாவது, வெற்றியில் ஒரு தோல்வி!

கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா இரண்டாம் பொருள் நம்மை மகிழ்விக்கும். அதாவது நாம் வெற்றி அடைந்து விட்டோம். அதில் சிறிய தோல்விகள் நமக்கு நடந்து இருக்கலாம். அந்த இன்னலானது நாம் வரும் காலங்களில் சுலபமாக சமாளிக்கும் வகையிலும் இருக்கலாம். கிடைத்த பெருவெற்றியை பார்க்கும்போது நமக்கு ஏற்பட்ட சிறுதோல்வி நம்மை கலங்கவிடாது.. இதுவே, இயற்பு.

இதில் முதலாம் பொருளையும் நாம் எண்ணிவிட தயங்க கூடாது. (தயங்குபவன் வாழ்க்கையை யூகிக்க மறுத்தவனாக இருக்கலாம்.) இதில், ஒருவன் ஒரு பெரும்செயலில் தோற்றுவிட்ட போதிலும் அதில் சிறுவெற்றிக்கண்டு இருக்கலாம். அந்த சிறு வெற்றி, வரும் காலத்தில் ஒரு பெரும் புகழையும் தேடித் தரலாம். ஆகவே, தோல்வியை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் இரண்டாம் பொருளில் ஒன்றை கவனிக்க மறுத்திருக்கலாம். இரண்டாம் கவியில், என் காதல் என்று ஒருமை தான் தோன்றியது. ஆனால், தோல்வி அடைந்தாலும், முதல் கவியில் நம் காதல் (நாம்) என்ற பன்மை தோன்றியது. இன்னல்கள் பல இருந்தாலும் அதில் ஒரு ஒற்றுமை இருக்கக்கூடும்.

ஆகவே, அதாகப்பட்டது மகாஜனங்களே !
உங்கள் தோல்வியை சிறிதெனவும் காணவேண்டாம். உம் வெற்றியை பெரிதெனவும் காணவேண்டாம். இஞ்ஞாலத்தில் வெற்றியும் தோல்வியும் நிலையற்றது. உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்...
                  
                          - பாரதி குமார்சுவாமி



செவ்வாய், 16 ஜனவரி, 2018

நான் சொல்ல, அவள் உரைத்தாள் !

நித்தமென நான் சொல்ல;
பித்தமென்று அவள் உரைத்தாள்.

ஒற்றுமையென நான் சொல்ல;
வேற்றுமையென்று அவள் உரைத்தாள்.

பாதியென நான் சொல்ல;
ஜாதியென்று அவள் உரைத்தாள்.

தாயமென நான் சொல்ல;
மாயமென்று அவள் உரைத்தாள்.

நிலவொளியென நான் சொல்ல;
நீயொழியென்று அவள் உரைத்தாள்.

காதலென நான் சொல்ல;
காமமென்று அவள் உரைத்தாள்.

நாமென நான் சொல்ல;
நானென்று அவள் உரைத்தாள்.

அன்பென நான் சொல்ல;
பின்பென்று அவள் நகர்ந்தாள்.

                 - பாரதி குமார்சுவாமி


திங்கள், 15 ஜனவரி, 2018

ரௌத்திரன்

தற்போதைய சூழலில் கையில் ரௌத்திரங் கொண்டொருவனின் வழிநடையும் மனநிலையும்.

                                 ரௌத்திரன்

உந்தன்
ஈர்விழியும்
வலிகளைத்தேட
- கண்பார்க்க
உரிமைப்புனல்
கூட - காடெல்லாம்
கங்குபொறி சூழ -
கனபாரம் உய்த்துநீ
நேர- பொய்யன்
உறவுகள் களைவில்
மூழ்க - நேரேபார்
உன்போர்க்களம் ,
எதிர்சப்தம்
இசையே - ருத்ரமாக
வந்துநில் உன்வீரம்
ரௌத்திரமாய் மாற -
ஆங்கே இறைமனம்
நிலைசொல்லும் ,


'வேதனை
யாவும்சேர்ந்திட
வெற்றியின் வழியே
செல்பவன் அல்லன்
 நான்

வலி வெறிகள்
என்னுள் நிரம்பிட
எந்நீதியைவிட
புகழும் சூழலில்
என்னையும்
துட்சமென யெண்ணி
எதிரே நிற்பவன் நான்'

                        - ஹிரன் முருகேசன்

 

வெள்ளி, 12 ஜனவரி, 2018

காதலிக்காதே காதலி !

முற்பொழுதில் பார்த்தபோது தெரியவில்லை,
பிற்பொழுதில்நீ எம்காதலி ஆவாயென்று - ஆகையால்
காதலிக்காதே காதலி.

சிறுபொழுது விளையாட்டில் ஆரம்பித்த நட்பு,
மறுபொழுதில் வேடிக்கை வினை ஆகிவிட்டதே - ஆகையால்
காதலிக்காதே காதலி.

உணர்வுகளை உள்ளங்கையில் கொண்ட உனக்கு
உணர்ச்சிகளைக் கையாளத் தெரியவில்லையே - ஆகையால்
காதலிக்காதே காதலி.

அனுபவ வாதிகளை நம்ப முடியாமல்
ஆணவ வார்த்தைகளை நம்புகிறாயே - ஆகையால்
காதலிக்காதே காதலி.

பண்பில் எழுந்திருந்தால் பரவாயில்லை ஆனால்
அன்பில் எழுந்து விட்டதே சந்தேகம் - ஆகையால்
காதலிக்காதே காதலி.

கோபம் காட்ட தெரிந்த உனக்கு
நியாயங் காட்ட தெரியாமல் போனதே - ஆகையால்
காதலிக்காதே காதலி.

நெடுந்தூரம் சென்ற பின்பும் உன்னை
தொடுந்தூரம் என்றே நினைக்க கூடும் - எம்நினைப்பை
நீ காதலிக்காதே காதலி.

என் உணவு இறங்கும் முன்னே
உன் இரை நகர்ந்து விட்டதாயென்று - தோன்றும்
எம்நினைப்பை நீ காதலிக்காதே காதலி.

சென்று விட்டாலும் நலமாயிரு என்சொல்லும்நீ
கொன்று விட்ட என் இதயத்தை - எப்போதும்
தவறிக்கூட காதலிக்காதே காதலி.

ஊர்க்கண்ணெல்லாம் உன்மீது விழுமென்
ஈன்றாளை சுற்றிப்போட சொல்ல விழைக்கும் - என்கண்ணை
ஒருபோதும் நீ காதலிக்காதே காதலி.

கண்ணுக்கு தெரியும் கவினைக் கண்டு
மனக்குன்றுக்குள் இருக்கும் கலைத்தாயை களைத்த - நீ
நம் காதலை காதலிக்காதே காதலி.

                                 - பாரதி  குமார்சுவாமி


தானா சேர்ந்த கூட்டம் - திரை விமர்சனம்

தன்னிடம் திறமை இருந்தும் அதை நிரூபிக்க தக்க சூழல்களை எதிர்பார்த்து கொண்டு இருப்பர் பலர். திறமையே இல்லாமல், கொடுத்த அதிகாரத்தை தப்பான சூழலில் பயன்படுத்திக் கொண்டிருப்பர் சிலர்.

இவ்விரண்டின் வேறுபாட்டையும், அதில் நிறைந்திருக்கும் இன்ப துன்பங்களை வெளிக்கொணரும் முயற்சியாக, கமர்ஷியல் காமெடி பொழுதுபோக்காக அமைந்த படமே 'தானா சேர்ந்த கூட்டம்'.

ஸ்பெஷல் 26 படத்தின் பாணியில் அமைந்த படமாயினும், காமெடியுடன் கலந்து ஒரு கருத்தை எடுத்து வைக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

திறமை இருந்தும் வேலை கிடைக்காமல் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், நாம் என்ன தவரிழைத்தோம்? ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது? வறுமையில் பிறந்தது நம் தவறா? இல்லை வறுமை தெரியாமலிருக்கும் முதலாளி தவறானவனா? என்ற பல்வேறு சிந்தனைகள் அவரவர் மனதில் எழுவது இயற்பாய் இருப்பினும் அது மறுக்க முடியாத உண்மையே..

இது இந்த காலத்தில் மட்டுமல்ல பல தலைமுறைகளை கடந்து நடந்து கொண்டு வருவது இன்றியமையாதது. பல கஷ்டமான சமயங்களில் சில அப்பாவியான இளைஞர்கள் இதில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்த நிகழ்வும் பலவுண்டு.

ஆசைக்காரர்களிடமும் அரசியல்கார்களிடமும் போய்விட்ட கருப்பு பணம் திரும்பி வருவதென்பது பிரிந்த உயிரை இறந்த உடலில் சேர்க்கும் முயற்சியாகும். இந்த  அதிரங்கமான செயலை செய்ய ஒருவனால் முடியாது..
ஆம், ஒருவனால் மட்டும் ஒன்றும் புடுங்க முடியாது. நிறைய பேர் சேர்ந்தால் தான் புடுங்க முடியும். அப்படி இந்த படத்தில் நடக்கும் சில சம்பவங்களின் மூலம் நிகழும் ஊழலை ஒழிக்க, தானா சேர்ந்த கூட்டத்தின் கதையிது.

முன்பு சொல்லியது போல திறமை இருந்தும் வேலைகிடைக்காத வாலிபன் சூர்யா. அதே போல இந்த நிலைமையில் வாழ முடியாமற் தற்கொலை செய்து கொள்ளும் சூர்யாவின் நண்பன் கலையரசன்.

இது தற்கொலையல்ல இந்த முடிவுக்கு தள்ளப்பட்ட கொலை என்ற உணர்வோடு, அரசியல்வாதிகள் தப்பான விஷயங்களுக்கு கேடுகெட்ட முறையில் நடத்தும் ஊழலை, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் சரியான
விஷயங்களுக்கு சூர்யாவின் தலைமையில் நடத்துகிறது.

படத்தில் நிறைய சின்னச்சின்ன கருத்துக்களை ஆங்காங்கே எடுத்துவைக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். வெறும் கருத்துக்களை எடுத்துவைத்தால், அதிகமான மக்கள் பாக்காமற் போக வாய்ப்புள்ளதால் அழகாக, நகைச்சுவையுடன் கலந்து எடுத்து வைக்கிறார்
.
ஒரு சாதாரண வீட்டில் வாழும் இளைஞனாக சூர்யா நடித்துள்ளார். 1980 -ல் நடக்கும் கதைபாணியில் இருப்பதால் பழைய சூர்யாவை பார்ப்பது போல தோன்றியது. 'மௌனம் பேசியதே' படத்தில் வரும் சூர்யா அங்கங்கே வந்து போவது தெரிகிறது. பார்க்கவே சுவாரசியமான இருந்தது. கதைக்கு தேவையான அளவில், பல அம்சங்களைக் கொண்டு படத்தில் நடிப்பை காட்டியிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன்,செந்தில், ல்கி சிவசங்கர் ஆகிய மூவரும் இந்த கூட்டதின் மூத்த உறுப்பினராய் திகழ்கின்றனர். ரம்யா கிருஷ்ணனின் அசட்டுத்தனமும், செந்திலின் காமெடியும், சிவசங்கர் தான் நிகாரிக்கப்பட்ட காரணத்தை கூறும்கணம் ஒரு பொழுது மேலும் இதைப்பற்றி சிந்திக்க வைக்கிறது.

தம்பி ராமையா, தனது வாழ்க்கையை அலுவலக உதவியாளராகவே கழித்து, பதவியில் இருக்கும் போதே நீ செத்தால் தான் உன் பதவி உன் மகனுக்கு கிடைக்கும் என்று அவர் அதிகாரியே சொல்லி அழுத்தப்படும் நிலைமையின் குணத்தை அழகாக காட்டியுள்ளார்.

ஆர்.ஜெ.பாலாஜி தனது குணச்சித்திர பாத்திரத்தை நன்றாக கையாண்டுள்ளார் என்றே சொல்லலாம். அவர் சில இடங்களில், சமூகத்தில் நடக்கும் விஷியங்களை அப்பட்டமாக கூறி கைதட்டல்கள் வாங்கிவிடுகிறார். வெளிநாடுகளில் இருந்து குளிர்பாகன (கூல் ட்ரிங்க்ஸ்) நிறுவனங்கள் வந்து நம் ஊர் பாகனங்களை இன்னும் சில நாட்களில் அழித்து விடும் என்று கூறும் கருத்துக்களை நாம் இன்று கண்ணார காண்கிறோம்.

நவரச நாயகன் கார்த்திக் தனது நவரசங்களையும் நிறுத்தி நிதானமாக கையாண்டுள்ளார். பொறுமையாகவும் விவேகமாகவும் இருக்கும் பாத்திரத்தில் தனது நிசப்தம் கலந்த நடிப்பை காட்டியுள்ளார்.

ஊழலை தெரியப்படுத்தும் விக்னேஷ் சிவன் தற்காலிக அரசியலில் நடக்கும் ஊழலையும் விட்டுவைக்கவில்லை. சசிகலாவை (சின்னம்மா) எதிர்மறையாக தாக்கியுள்ளார்.

'நானும் ரௌடி தான்' படத்திலும் சரி, 'போடா போடி' படத்திலும் சரி, இரண்டிலும் கதா நாயகிகளுக்கு ஒரு அழுத்தமான கதப்பாத்திரம் அமைந்திருப்பதை காணலாம்.

அந்த படங்களில், பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்திருந்தார்.ஆனால், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் வெறும் காதல் கதாபத்திரமாகவே வருகிறார் என்பது ஒரு சிறிய குறையாக உள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் படத்திற்கு ஒரு பக்கபலமாக அமைத்துள்ளார். சில இடங்களில் வரும் பின்னணி இசை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. பாடல்கள் அனைத்தும் அழகாக அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் 1980-களில் நடக்கும் காட்சிகளை வின்டேஜ் வடிவத்தில் காட்டியிருக்கிறார். இது கதைக்குள் செல்ல உதவுகிறது. மேலும், படம் முழுவதும் கலர்புல்லாக இருப்பதை உணரமுடிகிறது.

படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத், நாம் எழுதும் எழுத்துக்களை கோர்வையாக மாற்றி கவிதையக்குவதை போல, காட்சிகளை  ஒருங்கிணைத்து படமாகியுள்ளார்.

மொத்தத்தில், 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் எப்படி கட்டிட பொறியாளர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்ததோ, அதேபோல் 'தானா சேர்ந்த கூட்டம்' அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.



  

புதன், 10 ஜனவரி, 2018

அற்பென் முழுநிலை..

போர்வீரனுக்கும், பற்றினால் உண்டாகும் பலத்தோடு, அன்பென்றொன்று இருந்தாலே வாழ்நிலை முழுமை பெறும்…


பார்த்தபோது
பார்வையிணைத்தப் பாவை, இனி
பார்க்கக் கூடாதென
எம்மூட ஐயம்
கூறியதே ! கட்டுப்பட்டேன்-
செயலால் என்னால்
விளைந்தக் கர்மம்
என்பாதைவழி உன்னைத்
தீண்டினால் வாழ்அர்த்தம்
ஏதென வேதனைப்பாரென
விலகியது கால்கள் -
கண்கள் உன்னிடத்தில்
எனத்தோன்றும்முன் -
தெளிந்த நீரோடை
வழிகடக்கையிலே
ஐயத்திரவியம் மிதந்ததைக்
கண்டேனே !
உண்மை உணர
விரிந்தேனே -பாமைப்போலே
பார்தேனே - வலிகொடுக்கும்
ஊடலும் தவிர்ப்பேனே !
என்கையால் என்னுள்
காதலைப் புகித்தாள்-
தர்மமெனப் புனைத்தாள் -
என்வடிவம் உன்னால்கொண்ட
மாற்றம் வாழ்அவசியமே !
நான் நீயுமே -
கர்மமாற்றம் எனைத்தாண்டிப்
போகாதென ஒப்புக்கொண்டதனால் -
அதோடு அன்பின்அலைகள்
அவளை சூழ்வதனால்
படையென நின்றேனே !
தேவையே தர்மமே !
                                  
                        - ஹிரண் முருகேசன்


சனி, 6 ஜனவரி, 2018

அம்மா !

கிழிந்தப் புடவை என்றாலும்,மடி சேரும் நொடி எனக்கு மறக்கமுடியாத படுக்கை அம்மா...!
வானத்தை சுருட்டி பாய்மடி வேண்டாம்,அந்த வானத்தையே கண்டு ரசிக்க தாய்மடி வேண்டும்!

உன் ரத்தம்தான் உணவென்றால் பால்மடி வேண்டாம்,உன் முத்தங்கள் வாங்கிட வாஞ்சையோடு கேட்கிறேன் தாய்மடி வேண்டும்!

தேனிலவைக் காட்டுகிற தேவதைகளோடு ஓர்நொடி வேண்டாம்,தேம்பி அழும் தேய்பிறை எனக்கு தாய்மடி வேண்டும்!

மடிந்தாலும் நின் மடியினிலே மடிய வேண்டும்.மடிந்தபின்னும் மண்ணாக மாறும் வரை,நின் மடி தழுவிய புடவையோடு மடியவே மண்டியிட்டுக் கேட்டிடுவேன் மரணத்திடம்...!


              -த.தமிழரசன்


வியாழன், 4 ஜனவரி, 2018

காமமும் ஒரு வகை காதலே!

ஒப்புக்கொள் !

இரு வேறுமுழுப்
பாலுண்டு
அதிற்கலவி வழி
வாழுண்டு -அவ்விடத்தில்

பெண்களில்லாமல்
காமமுண்டோ ?
காமமில்லாமல்
கண்களுண்டோ ?
கண்களில்லாமல்
மாயையுண்டோ  ?
மாயை இல்லாமல்
அண்டமுண்டோ ?
அண்டம் இல்லையென்றபின்பும்
மாயையில்லாமல்
போவது உண்டோ ?
கண்ணில்லா நிலைநின்றபோதும்
வாழ்முயற்சி விடுவதுண்டோ ?
உம்முயற்சி தரும்
மாயையினை உணராமல்
போவது வுண்டோ ?
போரின்றி நீர்
வாழும்வேலையிலே
உம்மாயைக் கரைவதுண்டோ ?

உண்டென்றேதும்
இல்லையென்றபின்பு
ஏதடா இவ்வுலகில்
தேடல் நிலையிருக்கும்
தூய்மையன்பின்
அலைவரிசையினைத் தவிர்த்து,

மாயைமட்டுமே நீர்
மறந்து மாண்டயிடத்திலும்
பூப்பூக்கும் !
     
                 - ஹிரண் முருகேசன்


திங்கள், 1 ஜனவரி, 2018

மெய் உணர் !

மனிதர்களிடம் அறியாமையினைப் பற்றி வினாவுதல் அமைப்பில் அமைந்த கவிதை !


நீருண்டு
உம்மையர்க் கல்லைத்
தழுவ - அமுதுண்டு
உம்மையன் மூடுவாய்
உமிழ - பார்வள்ளளே
உம்மை மட்டுமல்ல
உம்போலிருக்கும்
அனைத்து கோக்களுக்கும்
உம்மூடர்வனம் மட்டுமே
உமதாகும் - சூழ்ந்திட்ட
மெய்த்தோன்றல்
உணருதுண்டோ?

                         - ஹிரண் முருகேசன்




Review

விண்மீனே..